துளிர் - கவிதை
-----------
(கவிதை வனம் குழுவில் )
துளிர்த்த விதையும்
செடியாய் மாறி
மரமும் ஆகிக்
கனியைக் கொடுக்கும்
கனியைப் கொடுத்துக்
களைத்த பின்னே
மரமும் விறகாய்
மாறிப் போகும்
துளிர்த்த பயிரும்
சாய்ந்த பின்னே
அறுத்துப் போட்டு
உதிர்த்த நெல்லைப்
பிரிந்த வைக்கோல்
மாட்டின் உணவு
சக்கை ஆனபின்
சாவே இயற்கை
வாழ்க்கைத் துளிரும்
வளர்ந்து சாயும்
இயற்கை நியதியை
ஏற்று வாழ்வோம்
------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக