மௌனத்தின் மொழி - கவிதை
———-
( கவிதை வனம் குழுவில் )
ஓரப் பார்வையும்
உதட்டுச் சுழிப்பும்
மூக்குச் சிவப்பும்
முந்தானை உதறலும்
நாக்கு மடிப்பும்
நளின நடையும்
நீட்டும் விரலும்
நிமிர்ந்த கழுத்தும்
சொல்லாத குறிப்பையா
சொற்கள் சொல்லிவிடும்
மௌனத்தின் மொழி போதும்
மங்கையே வா பக்கம்
இதழில் எழுதிடவே
ஏராள மொழி உண்டு
——நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக