மழைத்துளியின் பயணம்- கவிதை
-------------
( கவிதை வனம் குழுவில் )
விண்ணில் இருந்து
விழுந்தது மண்ணில்
வெளியும் உள்ளும்
வாங்கியது பூமி
வெளியின் துளிகள்
குளமாய்க் குழியாய்
ஆறாய் அருவியாய்
வெள்ளமாய்க் கடலாய்
கடலில் சேர்ந்தது
மறுபடி மேகமாய்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பரிசாய்ப் பாலமாய்ப்
பொங்கிப் பெருகி
முதலும் முடிவும்
ஒன்றென்று வாழ்வுக்கு
உணர்த்தி ஓயும்
------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக