திங்கள், 22 டிசம்பர், 2025

கரை காணா நதி - கவிதை

 கரை காணா நதி - கவிதை 

---------------------

(கவிதை வனம் குழுவில்) 


கரை என்றால் சன்னதி

சேர்ந்து விட்டால் நிம்மதி


போகும் வழியெல்லாம்

கரைகள் இருந்தாலும்


தொடர வைக்கும் துன்பம் அவை

தூங்க வைக்கும் இன்பம் அல்ல


ஓடும் வாழ்க்கையிலும்

ஓரத்தில் கரைகள் உண்டு


பாதை மாறாமல்

பயணம் போவதற்கு


உறவும் நட்பும் உண்டு

ஊக்கும் சொற்கள் உண்டு


தனக்குள் இறையென்ற

தத்துவம் உணர்கையில்தான்


வாழ்க்கை கரை சேரும்

வந்ததன் பொருள் புரியும்


சேரும் கடலில் தான்

நதியும் கரை காணும்


----------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை  ------------- எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு...