திங்கள், 22 டிசம்பர், 2025

செல்லச் சண்டை - கவிதை

 செல்லச் சண்டை - கவிதை 

——-

(கவிதை  வனம் குழுவில் ) 


அஞ்சு நிமிடம் தாமதமாம்

அதுக்கொரு சண்டை


பிறந்த நாளை மறந்தாச்சாம்

அதுக்கொரு சண்டை


ஒரே ஒரு நாள் பேசலையாம்

அதுக்கொரு சண்டை


செல்லச் சண்டையோடு

சீராக வளர்ந்த காதல்


கல்யாணம் ஆனபின்பு

கணவனைப் புரிந்த பின்பு


பொல்லாச் சண்டையாகிப்

பொழுதெல்லாம் சண்டை


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை  ----------- (கவிதை  வனம் குழுவில் )  துளிர்த்த விதையும் செடியாய் மாறி மரமும் ஆகிக் கனியைக் கொடுக்கும் கனியைப் கொடுத்துக் கள...