ஜன்னலோரப் பயணம் - கவிதை
----------------
(கவிதை வனம் குழுவில் )
ஜன்னலோரப் பயணத்தில்
இயற்கையும் கிடைப்பதுண்டு
எச்சிலும் கிடைப்பதுண்டு
இருக்கும் இடத்தைப் பொறுத்து
இரண்டும் கிடைப்பதால்
கவனித்து இடம் பிடிப்போம்
ஓடும் மரங்களின்
உல்லாசம் ரசிப்போம்
ஆகாய வீதியின்
அந்தரங்கம் அறிவோம்
எங்கிருந்தோ கேட்கும்
இசையில் மயங்குவோம்
வேகக் காற்றால்
விழிகள் திறப்போம்
மாறும் தென்றலில்
கண்கள் அயர்வோம்
பழைய காதலைப்
பார்க்கும் நேரம்
உதிர்ந்த பூக்களை
ஒட்டும் நேரம்
கனவுப் பாதையில்
கஷ்டம் இல்லை
காண்பதும் கேட்பதும்
இன்பம் இன்பம்
பயணம் முடியும்
பழையன திரும்பும்
--------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக