திங்கள், 22 டிசம்பர், 2025

காலக் கண்ணாடி - கவிதை

 காலக் கண்ணாடி - கவிதை 

-------------------

(கவிதை  வனம் குழுவில் ) 


காலக் கண்ணாடியின்

கோலங்கள் பலவிதம்


இலக்கியக் கண்ணாடியில்

எழுத்தின் மாற்றம்


தலைமுறைக் கண்ணாடியில்

கலாச்சார மாற்றம்


அரசியல் கண்ணாடியில்

ஆட்சியின் மாற்றம்


மக்களும் சமூகமும்

மாறும் தோற்றத்தை


காலக் கண்ணாடி

காட்டும் விதத்திலே


வலியும் புரிகிறது

வழியும் தெரிகிறது


--------------------நாகேந்திர பாரதி

 

My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை  ----------- (கவிதை  வனம் குழுவில் )  துளிர்த்த விதையும் செடியாய் மாறி மரமும் ஆகிக் கனியைக் கொடுக்கும் கனியைப் கொடுத்துக் கள...