திங்கள், 8 டிசம்பர், 2025

காத்திருப்பின் சுகம் - கவிதை

 காத்திருப்பின் சுகம் - கவிதை 

——-

( கவிதை வனம் குழுவில் ) 


பூத்திருக்கும் பூவும்

காத்திருந்தது மொட்டாக


பழுத்திருக்கும் பழமும்

காத்திருந்தது காயாக


இயற்கைக்கு மட்டுமா

வாழ்க்கைக்கும் காத்திருப்பே


காத்திருந்த கரு தான்

சிசுவாகி சிரம் காட்டும்


உழைப்பைக் கொடுத்துவிட்டு

சுகமாகக் காத்திருந்தால்


ஊதியம் மட்டும் அல்ல

உயர்வும் பதவியிலே


காரியத்தில் மட்டுமா

காதலுக்கும் காத்திருப்பே


காத்திருந்த சுகக்கனவு

காதலிலே சுபமாகும்


பார்த்திருந்த பாவையுமே

பரிவோடு கைப்பிடிப்பாள்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மௌனத்தின் மொழி - கவிதை

 மௌனத்தின் மொழி - கவிதை  ———- ( கவிதை வனம் குழுவில் )  ஓரப் பார்வையும் உதட்டுச் சுழிப்பும் மூக்குச் சிவப்பும் முந்தானை உதறலும் நாக்கு மடிப்ப...