தொலை தூர நிலவு - கவிதை
—-
( கவிதை வனம் குழுவில் )
தூரத்தில் இருந்தாலும்
நிலவின் ஒளி இறங்கி
பக்கத்தில் வந்துவிடும்
தூய அன்பைத் தரும்
நேயம் மிக்கோரும்
நிச்சயமாய் அப்படித்தான்
தூரத்தில் இருந்தாலும்
பக்கத்தில் இருந்தாலும்
நேரத்தில் உதவிடுவார்
நெருக்கத்தை உணர்வதற்கும்
நெஞ்சத்தை அறிவதற்கும்
தூரம் தடை அல்ல
——நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக