திங்கள், 22 டிசம்பர், 2025

மை சிந்தும் பேனா - கவிதை

 மை சிந்தும் பேனா - கவிதை 

--------------

(கவிதை  வனம் குழுவில் ) 


மை சிந்தும் பேனாவால்

கையில் தான் கறையாகும்


பொய் சிந்தும் பேனாவால்

மனம் எல்லாம் கறையாகும்


சமுதாயப் பொறுப்போடு

சிந்தித்து எழுதினால்


சிந்துகின்ற மையெல்லாம்

ஜீவனுள்ள எழுத்தாகும்


செந்தமிழின் துணையாலே

ஜெகமெல்லாம் சீராகும்


---------------நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளிர் - கவிதை

 துளிர் - கவிதை  ----------- (கவிதை  வனம் குழுவில் )  துளிர்த்த விதையும் செடியாய் மாறி மரமும் ஆகிக் கனியைக் கொடுக்கும் கனியைப் கொடுத்துக் கள...