மை சிந்தும் பேனா - கவிதை
--------------
(கவிதை வனம் குழுவில் )
மை சிந்தும் பேனாவால்
கையில் தான் கறையாகும்
பொய் சிந்தும் பேனாவால்
மனம் எல்லாம் கறையாகும்
சமுதாயப் பொறுப்போடு
சிந்தித்து எழுதினால்
சிந்துகின்ற மையெல்லாம்
ஜீவனுள்ள எழுத்தாகும்
செந்தமிழின் துணையாலே
ஜெகமெல்லாம் சீராகும்
---------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக