மண் வாசனை - கவிதை
——-
(கவிதை வனம் குழுவில் )
விழுந்து புரண்ட
பிறந்த மண்
எழுந்து ஓடிய
பிறந்த மண்
உள்நாடும் வெளிநாடும்
உழைத்துக் களைத்து
திரும்பி வந்து
சேர்ந்த மண்
எரிப்பதோ புதைப்பதோ
இங்கேதான் என்று
வந்து சேர்ந்த
சொந்த ஊரின்
மண் வாசத்தில்
தாயின் பாசம்
———-நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக