திங்கள், 22 டிசம்பர், 2025

மண் வாசனை - கவிதை

 மண் வாசனை - கவிதை 

——-

(கவிதை  வனம் குழுவில் ) 


விழுந்து புரண்ட

பிறந்த மண்


எழுந்து ஓடிய

பிறந்த மண்


உள்நாடும் வெளிநாடும்

உழைத்துக் களைத்து


திரும்பி வந்து

சேர்ந்த மண்


எரிப்பதோ புதைப்பதோ

இங்கேதான் என்று


வந்து சேர்ந்த

சொந்த ஊரின்


மண் வாசத்தில்

தாயின் பாசம்


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories/Articles in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எத்தனை முகங்கள் - சிறுகதை

 எத்தனை முகங்கள் - சிறுகதை  ------------- எப்படி இருந்தால் என்ன. அவள் அவள்தான் . அவளும் பெண்தான். வீட்டில் ஒரு முகமும் , வெளி இடங்களில் வேறு...