கரை சேரும் ஓடங்கள் - கவிதை
—————
(கவிதை வனம் குழுவில் )
இன்பமும் துன்பமும்
இரண்டு பக்கங்கள்
மாறி வருபவை
மாற்றி வைப்பவை
வலியை அறிந்தால்தான்
வாழ்க்கை புரியும்
புரிந்த வாழ்க்கைக்கு
இரண்டும் ஒன்றுதான்
புயலைத் தாண்டி
கரை சேரும் ஓடம் தான்
——-நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக