மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
---------------------------------------------------------------------------------------------------------
மேன்மை தரும் மன்றம் - யூடியூபில்
மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
---------------------------------------------------------------------------------------------------------
மேன்மை தரும் மன்றம் - யூடியூபில்
தலித் இலக்கியம் - நவீன விருட்சம் நிகழ்வு
-------------------------------------------------------------------------------
சொலவடைகள் - குவிகம் நிகழ்வு
-------------------------------------------------------------
நகைச்சுவைத் திறன் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு
-------------------------------------------------------------------------------------------------
நகைச்சுவைத் திறன் - யூடியூபில்
தூரத்தில் சென்றவள் - விருட்சம் நிகழ்வில் கவிதை
------------------------------------------------------------------------------------------
தூரத்தில் சென்றவள் - யூடியூபில்
எதிர்காலம் - தமிழூற்றில் திட்டமிடாப் பேச்சு
---------------------------------------------------------------------------
பட்டிமன்றப் பேச்சு - குவிகம் சுந்தரராஜன் பிறந்த நாள் விழா
----------------------------------------------------------------------------------------------------
பட்டிமன்றப் பேச்சு - யூடியூபில்
தூரத்தில் சென்றவள் - கவிதை
---------------------------------------------
வயிற்றின் அழுகைக்கும்
வலியின் அழுகைக்கும்
மொழியைப் புரிந்திருந்து
மூலம் தீர்த்திடுவாள்
பாடம் புரியாமல்
பரிதவிக்கும் பொழுதினிலே
கூடப் படித்திருந்து
குறையைத் தீர்த்திடுவாள்
புழுதிக் காலோடு
புரண்டு வருகையிலே
கழுவிச் சேலையினால்
காலைத் துடைத்திடுவாள்
காலம் ஓடுகையில்
காதல் கூடுகையில்
பாலம் அமைந்தந்த
படுக்கை போட்டிடுவாள்
வயதின் முதிர்ச்சியிலே
வாழ்க்கைத் தளர்ச்சியிலே
துயரத்தில் நம்மை விட்டு
தூரத்தில் சென்றிடுவாள்
------------------------------------நாகேந்திர பாரதி
தூரத்து மாம்பழம் - கவிதை
-------------------------------------------
ஓரக் கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடி விட்டு
தூரத்து மாம்பழமாய்
தொங்குவதை விட்டுவிடு
நேரத்தில் விழுந்துவிடு
நெருக்கத்தில் வந்துவிடு
காலத்தில் கனிந்தால்தான்
காதலுக்கு மரியாதை
பாலுக்கும் வயதானால்
பழுதாகித் திரிந்துவிடும்
பாலைக்கு நீராக
பாய்ந்து வந்துவிடு
ஏழைக்குச் சோறாக
இன்பம் தந்துவிடு
நாளைக்கு வந்துவிடு
நம்பிக்கை தந்துவிடு
காலைக்குக் காத்திருப்பேன்
கண்ணுக்குள் உன்னோடு
---------------------------------நாகேந்திர பாரதி
குறுங்கவிதைகள்
--------------------------------------
வேர்கள்
————--------------------------
விழுதுகள் வந்து விட்டாலும்
விட்டுவிடாது மரத்தை
வேர்கள்
————
வெயில்
———-
ஏழைகளின் வாழ்வில் மட்டும்
இருட்டில் கூட
வெயில்
————
பொய்கள்
————-
தேவைப் படும் நேரத்தில்
தீங்கில்லாத பொய்களே
வாழ்க்கை
————
----------------------------நாகேந்திர பாரதி
புகைப்படப் புனிதர் - கவிதை
——————————————————
ஆமா என்ற சொல்லுக்கு
அடுத்த சொல் தெரியாதவர்
மாமா என்ற வார்த்தைக்கு
மகத்துவம் சேர்த்தவர்
மகளின் மணாளன் என்ற
மனத்தின் அன்போடு
மகனும் இவன்தான் என்ற
மகிழ்ச்சியில் இருந்தவர்
காலத்தின் கொடுமையினால்
கடுமையாய் நோய்வாய்ப்பட்டு
பொசுக்கென்று போய்விட்டு
புகைப்படமாய் ஆனவர்
மாலையிட்டு வணங்குகின்ற
மாலைப் பொழுதில் எல்லாம்
மங்கலமாய் வாழ்கவென்ற
மன வாழ்த்து புகைப்படத்தில்
—————நாகேந்திர பாரதி
மேன்மை தரும் மன்றம் - தமிழூற்றில் மதிப்பீட்டுப் பேச்சு ------------------------------------------------------------------------------------...