தரிசனம் - கவிதை
--------------
உலகப் புகழ் பெற்று விட்ட
திருவிழாக் கூட்டத்தில்
உள்ளூர் ஜனங்கள் எல்லாம்
வரிசையில் தெருவில் நின்று
அம்மன் தரிசனத்திற்கு
வேர்த்திருந்து காத்திருந்தோம்
பேத்தி போன இடம்
கீழடியின் பொருட்காட்சி
ஜிகர்தண்டா வாயோடு
பழங்காலத் தரிசனத்தில்
--------------- நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக