தூரம் போனவை - கவிதை
---------------------------------------
கலங்கிக் கிடந்த கண்மாயில்
குளித்திருக்கக் கூடாது
நிரம்பி வழிந்த கோயிலுக்குள்
நுழைந்திருக்கக் கூடாது
பூக்கள் உதிர்ந்த சோலைக்குள்
போயிருக்கக் கூடாது
பூட்டியிருந்த அந்த வீட்டைப்
பார்த்திருக்கக் கூடாது
தூரம் போன நினைவுகளைத்
தொந்தரவு செய்திருக்கக் கூடாது
--------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக