ஊர்க் கோயில் -கவிதை
---------------
ஒளிந்து பிடித்து விளையாடிய வாகனங்கள்
ஒளிந்து கொண்டன கூண்டுக்குள்
உளிச்சத்தம் கேட்ட வெளிப் பிரகாரத்தில்
ஊர்ப் புரணிச் சத்தம்
திறந்து கிடந்த தெப்பக்குளத்தைத்
தேடிப் பார்த்தால் தெரிகிறது
கர்ப்பக் கிரகத்தில் தரிசித்த சாமியும்
கண்ணெட்டும் தூரத்தில் காட்சி
பக்கத்துக் கிராமத்து அம்மன் மட்டும்
பரிச்சயப் புன்னகை பக்கத்தில் தந்தாள்
-----------------------
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக