தோள் கொடுக்கும் தோழமை - கவிதை
-----------------
(கவிதை வனம் குழுவில் )
பள்ளியில் இருந்தே
பழகி வந்ததால்
நல்லதும் கெட்டதும்
நடத்திப் பார்த்ததால்
சிரிப்பும் அழுகையும்
சேர்ந்து செய்ததால்
பரிசும் உதையும்
பங்கு போட்டதால்
அவனை நானும்
என்னை நானும்
ஒன்றாய் நினைத்து
உறவு கொண்டதால்
வருடம் ஆனாலும்
வயது போனாலும்
தோள் கொடுப்பான்
தோழன் என்றும்
--------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக