தெரு விளக்கு - கவிதை
----------------
( கவிதை வனம் குழுவில் )
பாதைக்கு மட்டும் அல்ல
படிப்புக்கும் வெளிச்சம் நான்
என் அடியில் படித்தவர்கள்
எத்தனை பேர் உச்சியிலே
ஓரத்தில் இருந்தாலும்
உதவிக்கு நான் உண்டு
இருட்டுக்கும் திருட்டுக்கும்
என்றுமே எதிரி நான்
மின்சார உயிர் ஊட்டிக்
காப்பதுவோ உம் பொறுப்பு
--------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக