புதன், 7 ஜனவரி, 2026

நரை கூடும் காதல்-கவிதை

 நரை கூடும் காதல்-கவிதை 

-------------------

(கவிதை வனம் குழுவில் ) 


கண்ணோரம் நெளிகின்ற கோடுகளில்

காதலின் வரிகளின் கவிதை


இதழ்களில் உலர்ந்திட்ட ஈரத்தில்

காதலின் சொற்களின் பக்குவம்


கால்களின் மெதுவான நடையிலோ

காதலின் அமைதியின் கவர்ச்சி


கைகளில் புடைத்திட்ட நரம்புகளில்

காதலின் ரத்தத்தின் ஓட்டம்


கூந்தலில் கலந்திட்ட வெண்மையில்

காதலின் கூடிய தூய்மை


-----------------நாகேந்திரபாரதி


My Poems/Stories/Articles in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்திரா சௌந்தரராஜன் - சிறுகதை மதிப்புரை

 இந்திரா சௌந்தரராஜன் -  சிறுகதை மதிப்புரை  ------------ நன்றி அழகியசிங்கர், வணக்கம் நண்பர்களே. இந்திரா சௌந்தரராஜன் என்றால் மர்மக் கதை மன்னர்...