நரை கூடும் காதல்-கவிதை
-------------------
(கவிதை வனம் குழுவில் )
கண்ணோரம் நெளிகின்ற கோடுகளில்
காதலின் வரிகளின் கவிதை
இதழ்களில் உலர்ந்திட்ட ஈரத்தில்
காதலின் சொற்களின் பக்குவம்
கால்களின் மெதுவான நடையிலோ
காதலின் அமைதியின் கவர்ச்சி
கைகளில் புடைத்திட்ட நரம்புகளில்
காதலின் ரத்தத்தின் ஓட்டம்
கூந்தலில் கலந்திட்ட வெண்மையில்
காதலின் கூடிய தூய்மை
-----------------நாகேந்திரபாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக