இல்லத் தலைமை - கவிதை
----------------
(கவிதை வனம் குழுவில் )
இல்லத் தலைமை
இருவர்க்கும் பொதுவென்போம்
மையல் அறையிலும்
சமையல் அறையிலும்
குழந்தை வளர்ப்பிலும்
பெரியோர் பொறுப்பிலும்
வீட்டுப் பணியிலும்
நாட்டுப் பணியிலும்
இருவர் பங்கும்
இணையாய் இருந்திட்டால்
வீடும் சிறக்கும்
நாடும் செழிக்கும்
----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories/Articles in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக