வெள்ளி, 26 ஜூலை, 2024

பூக்களைப் பறியுங்கள் - கவிதை

 பூக்களைப் பறியுங்கள் - கவிதை 

--------------------------------

பூக்களைப் பறிக்காதீர்கள்

என்று சொல்லாதீர்கள்


இவை பறிக்க வேண்டிய

பூக்கள்


பறித்துக் கசக்க வேண்டிய

பூக்கள்


கசக்கி முகர வேண்டிய

பூக்கள்


முகர்ந்து உணர வேண்டிய

பூக்கள்


உணர்ந்து பகிர வேண்டிய

பூக்கள்


ஆம் , இவை

புத்தகப் பூக்கள்


———-நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...