வியாழன், 5 செப்டம்பர், 2024

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை 

-------------------------

கள்ளு இறக்கிய காலத்தில்

காத்துக் கிடந்தவர் பல பேர்


கதிர் அறுத்த காலத்தில்

கஞ்சி குடித்தவர் பல பேர்


காஞ்சு போன காலத்தில்

மட்டை உரித்தவர் சில பேர்


உறிஞ்சு விழும் சட்டத்தில்

முதுகு சொறிந்தவர் சில பேர்


கூட இருந்த பனையெல்லாம்

விறகாகவும் வீடாகவும்


ரோடு தெரிகிறது

பஸ் சப்தம் கேட்கிறது


பஸ்சுக்குள் ஒரு பையன்

கை அசைப்பது தெரிகிறது


ஒத்தைப் பனைமரம் இன்னும்

எத்தனை நாளைக்கு


-------------------நாகேந்திர பாரதி



My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

வலி போகும் நேரம் - கவிதை

 வலி போகும் நேரம் - கவிதை  -------------------------------- முற்றிய முதுமை நோயில் முனகும் அவள் கண்ணுக்குள் முதலிரவுக் கணவன் முகம் முதற்பிள்ள...