ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

தோட்டத்துப் பூ - கவிதை

 தோட்டத்துப் பூ - கவிதை 

------------------


மணத்தைப் பரப்பி விட்டு

மண்ணுக்கு வா என்றது

மண்ணில் கிடந்த சருகு ஒன்று


இன்னும் கொஞ்ச நாள்

இருந்துவிட்டு வருகிறேன் என்றது

இன்று பூத்த பூ ஒன்று


அது காற்றின் கையிலும்

அதோ அந்தக் கடவுள் கையிலும்

என்றது சருகு


அந்தக் கடவுள் கையில்

பூக்கூடையோடு

வந்து கொண்டு இருந்தார் .


-------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை

 தொடர் சைக்கிள் ஓட்டம் -சிறுகதை  ----------------------- 'அம்மனோ சாமியோ' ரெக்கார்ட் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆச்சு ஐந்து நாள் தொடர...