தோட்டத்துப் பூ - கவிதை
------------------
மணத்தைப் பரப்பி விட்டு
மண்ணுக்கு வா என்றது
மண்ணில் கிடந்த சருகு ஒன்று
இன்னும் கொஞ்ச நாள்
இருந்துவிட்டு வருகிறேன் என்றது
இன்று பூத்த பூ ஒன்று
அது காற்றின் கையிலும்
அதோ அந்தக் கடவுள் கையிலும்
என்றது சருகு
அந்தக் கடவுள் கையில்
பூக்கூடையோடு
வந்து கொண்டு இருந்தார் .
-------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கவிதை சிறப்பு.
பதிலளிநீக்கு