ஏனிந்த ஓட்டம் - கவிதை
----------------------
பள்ளிப்பருவ ஓட்டத்தைப்
பெற்றோர் தடுப்பதில்லை
வேலைப்பருவ ஓட்டத்தை
மற்றோர் தடுப்பதில்லை
குடும்பப்பருவ ஓட்டத்தைச்
சுற்றோர் தடுப்பதில்லை
எண்ணங்களின் ஓட்டத்தை
நாமே தடுப்பதில்லை
எரிகின்ற நேரத்தில்
எழுந்தோட எழும்பும்
உடலின் ஓட்டத்தைத்
தடுத்துப் படுக்க வைப்பான்
கருமமே கண்ணான
சுடுகாட்டுக் காவலாளி
------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக