சனி, 9 மார்ச், 2024

பெண் என்னும் பேராற்றல் - கவிதை

 பெண் என்னும் பேராற்றல் - கவிதை 

————

தொப்புள் கொடி வழி

துடிப்பை வளர்த்து


மாதங்கள் பத்து

மனதிலும் சுமந்து


வீறிடும் மகவின்

விம்மல் அடக்கி


மடியினில் சாய்த்து

மார்பினில் தேக்கி


மற்றொரு உயிரை

மன்பதைக் களிக்கும்


பெண்ணினும் ஆற்றல்

பெற்றவர் உளரோ


———நாகேந்திர பாரதி


 My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...