புதன், 13 மார்ச், 2024

கட்டிய கரங்கள் - கவிதை

 கட்டிய கரங்கள் - கவிதை 

———

வெடித்த மலையின்

விரிசல் பாறையிலும்


வறண்ட ஆற்றின்

குழிந்த மண்ணிலும்


சிதைந்த கோயிலின்

துருத்தும் கல்லிலும்


இடிந்த வீட்டின்

குட்டிச் சுவற்றிலும்


கட்டிய கரங்கள்

மட்டும் அல்ல


கண்ட கனவுகளும்

சேர்ந்தே தெரியும்


——நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...