கட்டிய கரங்கள் - கவிதை
———
வெடித்த மலையின்
விரிசல் பாறையிலும்
வறண்ட ஆற்றின்
குழிந்த மண்ணிலும்
சிதைந்த கோயிலின்
துருத்தும் கல்லிலும்
இடிந்த வீட்டின்
குட்டிச் சுவற்றிலும்
கட்டிய கரங்கள்
மட்டும் அல்ல
கண்ட கனவுகளும்
சேர்ந்தே தெரியும்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக