வீழ்ந்தால் விதை - கவிதை
——-
முட்டி மோதித்தான்
முளைத்து வர வேண்டும்
கதிருக்கும் நீருக்கும்
காத்துத்தான் கிடக்க வேண்டும்
மிருகங்கள் மிதித்தாலும்
மடங்கித்தான் எழ வேண்டும்
காட்சிக்கு விருந்தாகிப்
பூவாகப் பூத்தபின்பு
சமுதாயம் பயனடையும்
பழமாகப் பழுத்த பின்பு
மரமாக நிமிர்ந்த படி
நிழலாக நீண்ட பின்பு
விழுதுகளை வளர்த்த பின்பு
விதைகளாக விழுந்த பின்பு
வாழ வந்த நோக்கம்
வாரிசுகளால் தொடர்ந்திருக்கும்
வாழ வைத்த ஆக்கம்
வற்றாமல் நிலைத்திருக்கும்
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக