செவ்வாய், 19 மார்ச், 2024

உழவின்றி உலகேது -கவிதை

 உழவின்றி உலகேது -கவிதை 

———

உணவின்றி வாழ்வதற்கு

உயிராலே முடியுமென்றால்


உழவின்றி வாழ்வதற்கும்

உலகாலே முடியும்


ஏரும் கலப்பையும்

எருதும் மட்டும் அல்ல


மாறும் அறிவியலால்

மண் வளத்தைக் கூட்டுகின்ற


எல்லாக் கருவிகளும்

எங்கள் உதவிகளே


மண்ணைக் காத்திடுவோம்

மண்ணால் வாழ்ந்திடுவோம்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...