போதையின் பாதை - கவிதை
———-
சோகத்தை மறப்பதற்குச்
சுகமான இசை உண்டு
தாகத்தைத் தணிப்பதற்குத்
தண்ணீரின் துணை உண்டு
போதையின் பாதை
பொல்லாத பாதை
இழுத்துச் சென்று விடும்
இடுகாட்டை நோக்கி
சாவதற்கா வந்தோம்
சடுதியில் மறைந்து போக
வாழ்வதற்கே வந்தோம்
வாழ்ந்து காட்டுவோம்
குடி கெடுக்கும் குடிமகனாய்
மாறாமல் என்றும்
குடி உயர்த்தும் கோமகனாய்
மாறுவதே நன்று
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக