நீரும் நெருப்பும் - கவிதை
———-
நெருப்பை அணைப்பதற்கு
நீரிருந்தால் போதும்
கோபத்தைத் தணிப்பதற்குக்
குளிர்ந்த சொல் போதும்
கடுஞ்சொல்லாய் வீசினால்
காற்றும் சூடாகும்
அணைப்பதுவே நம் வேலை
அன்பாலே அது முடியும்
பொறுமையாய்க் காத்திருந்தால்
பூவாகும் மொட்டு
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக