காலாற நடக்கும் கரை - கவிதை
———
உழைத்துக் களைத்த உடல்
ஓய்ந்து படுப்பதற்கும்
எழுந்து நடப்பதற்கும்
ஏற்பட்ட கடற்கரை
காதலர் சேர்வதற்கும்
கடும்தீனி அரைப்பதற்கும்
மாறிய கோலத்தால்
மண் வாசம் போனது
கரை தாண்ட முடியாத
அலையெல்லாம் நுரை தள்ளி
கோபத்தில் கத்துவது
காதுகளில் கேட்கலையா
சுற்றுப் புறம் பார்த்து
சுகாதாரம் காத்து
காற்றின் குரல் கேட்டு
கடற்கரையைப் பேணிடுவோம்
——-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக