எரிமலைக் குழம்பாய் - கவிதை
———
உப்புப் பற்றாது என்று
உணவுத் தட்டை
தூக்கியெறியும் கணவனிடமும்
இந்தச் சுடுகாட்டில்
எரிக்காதே உடலை என்று
தடுக்கும் சாதிக் கனவானிடமும்
காசைக் கொடுத்தாச்சு
ஒழுங்கா ஓட்டுப் போடு என்று
மிரட்டும் அரசியல் பணவானிடமும்
எதிர்த்துப் பேச முடியாமல்
உள்ளுக்குள் குமுறும் அந்த
உணர்ச்சிகள் வெடிக்கும் போது
எரிமலைக் குழம்புதான்
புரட்சிப் பூகம்பம் தான்
புதியதோர் உலகம் தான்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக