பிணைக் கைதிகள் - கவிதை
------------------------------
கண்ணருகே துப்பாக்கி
கழுத்தருகே கத்தி
வெடிக்குமா வெட்டுமா
விடுதலை கிட்டுமா
பெட்ரோலின் வாசம்
டயர்களின் வேகம்
பக்கத்தில் பாய்ச்சி விட்டு
விலகிடும் வெளிச்சம்
மூடிய முகத்துக்குள்
முறைக்கும் கண்கள்
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
இரவுக்கும் பகலுக்கும்
வித்தியாசம் இல்லை
மூடிய கதவுக்குள்
முற்றிலும் இருட்டு
வடியுமா கோபம்
முடியுமா வழக்கு
விடியுமா வாழ்க்கை
வீட்டுக்குச் செல்வோமா
---------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அவர்களின் மனதை வெளிச்சமாக்கி காட்டியது தங்களது கவிதை.
பதிலளிநீக்கு