வியாழன், 25 ஏப்ரல், 2024

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை 

------------------------------

கண்ணருகே துப்பாக்கி

கழுத்தருகே கத்தி

வெடிக்குமா வெட்டுமா

விடுதலை கிட்டுமா


பெட்ரோலின் வாசம்

டயர்களின் வேகம்

பக்கத்தில் பாய்ச்சி விட்டு

விலகிடும் வெளிச்சம்


மூடிய முகத்துக்குள்

முறைக்கும் கண்கள்

எத்தனை பகல்கள்

எத்தனை இரவுகள்


இரவுக்கும் பகலுக்கும்

வித்தியாசம் இல்லை

மூடிய கதவுக்குள்

முற்றிலும் இருட்டு


வடியுமா கோபம்

முடியுமா வழக்கு

விடியுமா வாழ்க்கை

வீட்டுக்குச் செல்வோமா


---------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

நம்பிக்கைச் செடி- குறுங்கதை

 நம்பிக்கைச் செடி- குறுங்கதை  ——— மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் . உப்புமாவான ரவாவை உதிர்த்து முடித...