இடப் பெயர்ச்சி - கவிதை
——-
வானம் பார்த்த
கிராமம் விட்டு
வயிறு பார்த்து
இடப் பெயர்ச்சி
கண்மாய்க் கரைக்
குடிசை விட்டு
கூவக் கரையில்
குடியேற்றம்
ஊத்துக் கிணறுக்
காத்திருப்பு
தண்ணி வண்டிக்குத்
தாவி விட்டது
சீரியல் பார்த்து
அழும்போது
செத்துப் போன
பயிரின் நினைப்பு
ஒவ்வொரு இரவும்
கனவில் வரும்
ஊர்க் கோடி
ஒத்தைப் பனை
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக