நிரந்தரக் காதல்- கவிதை
——-
வானுக்கும் பூமிக்கும் நடக்கும்
வாசமான காதல் ஆட்டம்
இடியும் மின்னலும் இவர்களின்
இன்ப வெளிப்பாடு
இந்த மழைப் போர்வையில்
மகிழும் மணமக்கள்
மோகத்தை வரவழைக்கும்
குளிர் காற்று
சிதறி விழுந்த விதைகள்
செடிகளாய்ச் சிரிக்கும்
அதில் பூக்கும் பூக்களும்
காய்களாய் மாறிக் கனியும்
பூமியைப் பழுக்க வைத்து
புன்னகைக்கும் வானம்
வானத்தைக் கை நீட்டி
வாவென்னும் மரங்கள்
இந்தக் கூத்து தான்
இயற்கையின் வாழ்க்கை
இந்தக் காதல் தான்
நிரந்தரச் சேர்க்கை
——-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக