விடியலின் நோக்கம் - கவிதை
———-
ஒவ்வொரு காலையும்
உதிப்பது உயிர்
இன்றையப் பொழுதில்
இருந்திடும் நேரம்
நாளையப் பொழுதின்
நாற்றுக்கு விதை
விதைப்பதும் காப்பதும்
களையினை எடுப்பதும்
நீரினைப் பாய்ச்சி
நேராய் வளர்ப்பதும்
அறுப்பதும் சுவைப்பதும்
அவரவர் கையில்
விடியலின் நோக்கம்
முடிவது நம்மால்
——-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக