சனி, 9 மார்ச், 2024

விடியலின் நோக்கம் - கவிதை

 விடியலின் நோக்கம் - கவிதை 

———-

ஒவ்வொரு காலையும்

உதிப்பது உயிர்


இன்றையப் பொழுதில்

இருந்திடும் நேரம்


நாளையப் பொழுதின்

நாற்றுக்கு விதை


விதைப்பதும் காப்பதும்

களையினை எடுப்பதும்


நீரினைப் பாய்ச்சி

நேராய் வளர்ப்பதும்


அறுப்பதும் சுவைப்பதும்

அவரவர் கையில்


விடியலின் நோக்கம்

முடிவது நம்மால்


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...