வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

சுவடு - கவிதை

 சுவடு - கவிதை 

———


பாதச் சுவட்டைப்

பதித்துச் செல்கிறாய்


ஆழம் அதிகம் தான்

உன் மனதைப் போல


விழுந்து விடுவதற்கு

விருப்பம் எனக்கு


திரும்பிப் பார்ப்பாயா

தூக்கி விடுவாயா


புதைந்து கிடக்க விட்டுப்

போய் விடுவாயா


நீண்டு கிடக்கின்ற

நிழலிடம் சொல்லிப் போ


—————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...