நினைவுகளே நிரந்தரம் - கவிதை
———
கட்டிய கனவுகள்
கலைந்து போய் விடும்
கிட்டிய நினைவுகள்
கிளர்ந்து நின்றிடும்
ஒவ்வொரு நினைவிலும்
உண்மையின் வெளிச்சம்
இன்பமும் துன்பமும்
ஏற்றிய வெளிச்சம்
காட்டிய பாதையில்
கால்கள் போகட்டும்
நடப்பது எல்லாம்
நன்மையாய் ஆகட்டும்
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கவிதை வரிகள் சிறப்பு.
பதிலளிநீக்கு