வேர் வைக்கும் ஆசைகள் - கவிதை
———
வேர் வைக்கும் ஆசைகளை
வேர்வை ஊற்றி வளர்த்தால் தான்
நீண்டு மரமாகும்
நின்று நிழலாகும்
பூவாகிப் பிஞ்சாகிக்
காயாகிக் கனி ஆகும்
ஆகாயக் கோட்டைகளை
ஆயிரமாய்க் கட்டி விட்டு
சும்மா கிடந்திருந்தால்
சுவர் கூட எழும்பாது
அஸ்திவார எண்ணத்தை
ஆழமாய்ப் போட்டு விட்டு
சிறுகக் கட்டுவதில்
செயலைச் செலுத்தி விட்டால்
பெருக வாழ்ந்திடலாம்
பெருமை சேர்த்திடலாம்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக