குறுங்கவிதைகள்
-----------------
மரம்
------
எவ்வளவு நேரம் தான் நிற்பது
கால் வலிக்கிறது
கிழவி
-------------
பஞ்சடைக்கும் கண்களோடு
பஞ்சு பிரிக்கும்
தன கையே
தனக்குதவி
சுண்டல் விற்பவன்
----------------
நீங்கள் வாங்கிச் சாப்பிட்டால்
எங்கள் வயிறு நிறையும்
குழந்தை
------------------
வேர்களுக்கு நீரூட்டும்
விழுதுகளின் விரல்கள்
மூதாட்டி மனைவி
------------------
பின்னால் வந்தவர்
முன்னால் வழி நடத்தும்
காலமும் வரும்
-----------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக