புதன், 6 மார்ச், 2024

குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள்

-----------------

மரம் 

------

எவ்வளவு நேரம் தான் நிற்பது

கால் வலிக்கிறது


கிழவி 

-------------

பஞ்சடைக்கும் கண்களோடு 

பஞ்சு பிரிக்கும் 

தன கையே 

தனக்குதவி 


சுண்டல் விற்பவன் 

----------------

நீங்கள் வாங்கிச் சாப்பிட்டால் 

எங்கள் வயிறு நிறையும் 


குழந்தை 

------------------

வேர்களுக்கு நீரூட்டும்

விழுதுகளின் விரல்கள்


மூதாட்டி மனைவி 

------------------

பின்னால் வந்தவர்

முன்னால் வழி நடத்தும்

காலமும் வரும்


-----------------நாகேந்திர பாரதி 



My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...