குறுங்கவிதைகள்
----------------------------------
அன்பு
—-
நம் பார்வையே போதும்
அன்பைப் பரிமாறிக் கொள்ள
—-
மாடுகள்
—-
வைக்கோல் தீவன ஆசை காட்டியே
வண்டி இழுக்க வைப்பான்
——
காதல்
——
கண்ணீர்த் துளிகள் கழுவாது காதலியே
கசியும் இதய ரத்தத்தை
——-
துணை
——-
இன்று எருதுகள் , நாளை விழுதுகள்
என்றும் துணை உண்டு அவனுக்கு
——
சிலந்தி
--------------------
காதல் வலையில் சிக்கிக் கொண்டாலும்
காலி தான்
-------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
வரிகள் சிறப்பு கவிஞரே
பதிலளிநீக்கு