குறுங்கவிதைகள்
---------------------------------
வாழ்க்கை ஓடம்
---------------------
முன்னோடிய ஓடத்தால் பின்னோடிய தென்னைகள் போல்
நிழலாக நெஞ்சுக்குள் இளம்பருவம்
---
காத்திருப்பு
———
கண்களில் பசியோடு காத்திருக்கின்றன குஞ்சுகள்
தப்பி வருகின்ற தாய்க் குருவிக்காய்
-------------
பெண்கள்
———
தான் உறிஞ்ச எண்ணாமல் தேன் பார்வை சிந்துகின்ற
தட்டான்களைப் பிடிக்கும் பூக்களுக்கு
——
சூரியன்
———-
நெருப்புப் பழம் என்று தெரியாமல்
நெருங்கிப் பார்க்கிறது பறவை
———
தேநீர்ச் சொர்க்கம்
——-
பனிமரம் பார்த்தபடி பருகும் கோப்பைக்குள்
வந்து சேர்கிறது சொர்க்கம்
——
----------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக