செவ்வாய், 19 மார்ச், 2024

குறுங்கவிதைகள்

 குறுங்கவிதைகள் 

---------------------------------

வாழ்க்கை ஓடம் 

---------------------

முன்னோடிய ஓடத்தால் பின்னோடிய தென்னைகள் போல்

நிழலாக நெஞ்சுக்குள் இளம்பருவம்

---


காத்திருப்பு

———

கண்களில் பசியோடு காத்திருக்கின்றன குஞ்சுகள் 

தப்பி வருகின்ற தாய்க் குருவிக்காய்


-------------

பெண்கள்

———

தான் உறிஞ்ச எண்ணாமல் தேன் பார்வை சிந்துகின்ற

தட்டான்களைப் பிடிக்கும் பூக்களுக்கு

——


சூரியன் 

———-

நெருப்புப் பழம் என்று தெரியாமல்

நெருங்கிப் பார்க்கிறது பறவை

———

தேநீர்ச் சொர்க்கம்

——-

பனிமரம் பார்த்தபடி பருகும் கோப்பைக்குள்

வந்து சேர்கிறது சொர்க்கம்

——


----------நாகேந்திர  பாரதி 


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிணைக் கைதிகள் - கவிதை

 பிணைக் கைதிகள் - கவிதை  ------------------------------ கண்ணருகே துப்பாக்கி கழுத்தருகே கத்தி வெடிக்குமா வெட்டுமா விடுதலை கிட்டுமா பெட்ரோலின்...