கண்ணான கண்ணே - கவிதை
——————————
என் கண்ணான கண்ணாக
மாறி விட்ட பின்னே
உன்னைப் பார்ப்பது
நான் அல்ல பெண்ணே
பார்ப்பதும் நீயே
ரசிப்பதும் நீயே
உன்னையே நீ பார்த்து
ரசிப்பதைக் கண்டு
முறைக்காதே அப்படி
மறைக்காதே முகத்தை
இன்னும் பார்ப்பதற்கு
ஏராளம் இருக்கிறதாம்
உன்னிடம் இருந்த நீ
என்னிடம் சொல்கிறாய்
—————— நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக