வெள்ளி, 3 மே, 2024

நம்பிக்கைச் செடி- குறுங்கதை

 நம்பிக்கைச் செடி- குறுங்கதை 

———

மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் .


உப்புமாவான ரவாவை உதிர்த்து முடித்து ஓய்ந்து போன கிழிசல் பை .


மொண்டு வந்து ஊற்றிய தண்ணீர் நினைப்பில் ஓட்டையாய்க் கிடக்கும் உடைந்த வாளி .


மேலும் கீழுமாய் மானம் காத்து மினுக்கித் திரிந்து காலம் போன கழிசல் ஆடைகள் .


தம்ளராய்ப் பையாய் வண்டியாய் திரிந்து ஓய்ந்து போய்க் கிடக்கும் எத்தனை சாமான்கள் .


முடிந்ததது வாழ்க்கை என்று முனகிக் கிடக்கும் அவற்றோடு சேர்ந்து இலையுதிர்ந்த செடி ஒன்றும் ஓரத் தொட்டியில் .


‘ஒரு துளி விழுந்தால் போதும் , நான் துளிர்த்து எழுந்து விடுவேன் ‘ என்ற நம்பிக்கையோடு .


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உடைந்த கடிகாரம் - குறுங்கதை

 உடைந்த கடிகாரம் - குறுங்கதை ----------------------------------- வானத்தில் பறக்க நினைக்கும் மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்...