ஆற்றுச் சுழல் - கவிதை
————
கண்மாய்த் தண்ணீரில்
கண்ட மகிழ்ச்சியை
ஆற்றுச் சுழலில்
அறிய ஆசை
கொள்ளிடக் குளிர்ச்சியில்
குளிக்கும் வேகம்
தள்ளிடும் ஆற்றின்
தாக மோகம்
இன்னும் உள்ளே
இன்னும் உள்ளே
கண்கள் சிவந்து
கலங்கும் நேரம்
சுழலின் மத்தியில்
சுழலும் போது
கழலும் நினைவின்
கணப் பொழுது
மனைவி நினைவு
மக்கள் நினைவு
நினைவு பிறழும்
நேரம் நிம்மதி
———-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக