புதன், 29 மே, 2024

இன்ப வாழ்க்கை - கவிதை

 இன்ப வாழ்க்கை - கவிதை 

————

இரை தேடக் கிளம்பி விட்ட

பறவைகளின் இசை


வழி அனுப்பி வைக்கின்ற

இலைகளின் ஓசை


வரவேற்கும் ஆகாயம்

பசியாற்றும் பூமித்தாய்


சுற்றிக் காண்பித்த

சூரியனும் இளைப்பாற


நிலவின் வெளிச்சத்தில்

வீட்டின் வழி தெரியும்


இயற்கை காட்டுகின்ற

இன்ப வாழ்க்கை நிலை


———நாகேந்திர பாரதி


 My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பூக்களைப் பறியுங்கள் - கவிதை

 பூக்களைப் பறியுங்கள் - கவிதை  -------------------------------- பூக்களைப் பறிக்காதீர்கள் என்று சொல்லாதீர்கள் இவை பறிக்க வேண்டிய பூக்கள் பறித...