அன்புத் துளி - கவிதை
———
வளர்த்து எடுக்க
உழைத்துக் களைத்து
வயதும் ஏற
அடங்கும் நேரம்
ஆசை நெஞ்சின்
துடிப்பின் வெளிச்சம்
கண்ணில் தெரியும்
கவலை நேரம்
அன்புத் துளியை
அள்ளித் தெளித்தால்
வாடிய செடியின்
வருத்தம் போகும்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக