சொல்லுக சொல்லை - கவிதை
———-
விழுந்த சொல் ஒன்று
முளைத்து எழுந்து
கிளைகள் பரப்பி
இலைகள் முட்களாய்க்
குத்தவும் செய்யலாம்
விழுந்த சொல் ஒன்று
பூத்துக் குலுங்கி
வண்ணம் காட்டி
மணத்தைப் பரப்பி
மயக்கவும் செய்யலாம்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக