வியாழன், 4 ஜூலை, 2024

நோய் போகும் பாதை - கவிதை

 நோய் போகும் பாதை - கவிதை 

———


இனிப்புருண்டைப் பொடியோடு

ஹோமியோபதி வைத்தியம்


கசப்புருண்டை லேகியத்தில்

சித்த வைத்தியம்


மாத்திரையும் ஊசியுமாய்

ஆங்கிலேய வைத்தியம்


மருந்தும் வைத்தியமும்

மாறி மாறி வந்தாலும்


அன்போடு அதைக் கொடுத்து

ஆதரவாய்ப் பேசுகின்ற


செவிலியரின் புன்சிரிப்பே

நோய் போகும் பாதையெங்கும்


——நாகேந்திர பாரதி ‎


My Poems/Stories in Tamil and English


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...