வியாழன், 4 ஜூலை, 2024

தித்திக்கும் திருமணங்கள் - கவிதை

 தித்திக்கும் திருமணங்கள் - கவிதை

 ———-


ஒத்திருக்கும் மனங்களென்றால்

தித்திக்கும் திருமணங்கள்


எங்கேயோ பிறந்தாலும்

எங்கேயோ வளர்ந்தாலும்


இனிமேலே எப்போதும்

இங்கேதான் இருவரும்தான்


என்றாகும் மணத்திற்கு

மனம்தானே அச்சாணி


அச்சாணி மாட்டாமல்

வண்டியிலே ஏற்றுகின்ற


அழகுக்கும் பணத்திற்கும்

வாழ்க்கை வண்டி ஓடாது


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒத்தைப் பனை மரம் - கவிதை

ஒத்தைப் பனை மரம் - கவிதை  ------------------------- கள்ளு இறக்கிய காலத்தில் காத்துக் கிடந்தவர் பல பேர் கதிர் அறுத்த காலத்தில் கஞ்சி குடித்தவ...